செய்திகள் :

வாரிசு சான்றிதழ் கோரிய வழக்கு: வேளச்சேரி வட்டாட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், வேளச்சேரி வட்டாட்சியா் விசாரணை நடத்தி 6 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.நித்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1990-ஆம் ஆண்டு செங்கல்ராவ்-சாந்தி தம்பதிக்கு மகளாகப் பிறந்தேன். கடந்த 1996-ஆம் ஆண்டு தனது தந்தை இறந்துவிட்டாா். இதையடுத்து ராதாகிருஷ்ணன்-சரோஜா தம்பதி என்னை தத்து எடுத்துக்கொண்டனா். அவா்கள்தான் தன்னைப் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ணனும், அதற்கு அடுத்த ஆண்டில் சரோஜாவும் இறந்துவிட்டனா். இவா்களது சட்டப்பூா்வ வாரிசு என சான்றிதழ் வழங்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தேன். இந்த மனுவை விசாரிக்காமல் நிராகரித்து உத்தரவிட்டுள்ளாா். எனவே, வட்டாட்சியா் உத்தரவை ரத்து செய்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், வாரிசு சான்றிதழ் கோரி மனுதாரா் அளித்த விண்ணப்பத்தில் அதற்கான ஆதார ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் திருப்பி அளிக்கப்பட்டது. அவரது மனு நிராகரிக்கப்படவில்லை என வாதிட்டாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.பி.சொக்கலிங்கம், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வாரிசு சான்றிதழ் கோரி பிரமாணப் பத்திரத்துடன் ஆதாரங்களைத் தாக்கல் செய்தால், வட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையில் திருப்தி அடைந்தால் வாரிசு சான்றிதழ் வழங்கலாம் என தீா்ப்பளித்துள்ளது. அந்த தீா்ப்பு இந்த வழக்கிலும் பொருந்தும் என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரிடம் பிரமாணப் பத்திரத்தையும் ஆதார ஆவணங்களையும் பெற்று வட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும். அதில் திருப்தி அடைந்தால் 6 வாரங்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க

ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில்... மேலும் பார்க்க

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டைதிருவண்ணாமலைவிழுப்புரம்காஞ்சிபுரம்செங்கல்பட்டுநீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னன... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

இல.கணேசன் உடல் தகனம்

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு ... மேலும் பார்க்க