செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

post image

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு குஜராத்திற்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை காலை 6 மணியளவில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறான பாதையில் திரும்பியதால் விபத்து நிகழ்ந்தது. இதில் இசைக்குழு உறுப்பினர்களான ஹார்திக் டேவ் (37), பாடகர் ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17), ராஜேந்திர சோலங்கி (47) ஆகியோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 17 பேருடன் வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், வாரணாசியில் இருந்து இடைவிடாமல் பயணித்ததால், சோர்வு காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது என போலீஸ் அதிகாரி கூறினார். நான்கு பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. "காயமடைந்த ஓட்டுநரின் உடல்நிலை சீராகி பேசத் தொடங்கிய பிறகு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Four members of a Gujarat-based music band were killed and 11 other persons were injured on Saturday in a collision between a mini bus and a small truck in Shivpuri district of Madhya Pradesh, police said.

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க