செய்திகள் :

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

post image

ராகுல் காந்தியும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் என்று பாஜக விமர்சனம் சுமத்தியுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதை விமர்சித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதற்கு பாஜக எதிர்வினை ஆற்றியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைஒ விமர்சித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா இன்று(ஆக. 16) பேசியதாவது: "என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதில், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை குறித்த உண்மை இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் ‘ராகுல் - ஜின்னா’ கட்சி மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறது. ராகுலுக்கும் முகமது அலி ஜின்னாவுக்கும் ஒரே மாதிரியான சிந்தனை உள்ளது. மதத்தின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப்பட்டது.

ஜின்னாவின் விஷமத்தனமான சிந்தனையானது, ராகுல் காந்தியிடமும் காங்கிரஸ் கட்சியிடமும் இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. இடஒதுக்கீடும் மதத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதையேத்தான் ஜின்னாவும் தெரிவித்திருந்தார்.

ஷரியத் சட்டத்தையும் இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இந்தநிலையில், பிரிவினைப் பற்றிய உண்மையை வருங்கால தலைமுறைகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் முகமது அலி ஜின்னாவுடன் இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை ஒப்பிட்டு பாஜக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BJP National Spokesperson Gaurav Bhatia says, Rahul Gandhi and Mohammad Ali Jinnah have the same thinking

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க