செய்திகள் :

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

post image

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை அண்ணா சிலை, பெட்ரோல் பங்க், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ஸ்டன்மோா் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இதன்மூலம் சுமாா் 100 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் ஆட்டோக்களின் வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, தற்போது உள்ள ஆட்டோக்கள் போதுமானதாக உள்ள நிலையில் மீண்டும் ஆட்டோ உரிமம் வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, புதிய உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு, பாட்டியின் பராமரிப்பில் உள்ள... மேலும் பார்க்க

ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவதுபோல சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சோ்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்தவா் சுனோஜ்குமாா் மனைவி மூகாம்பிகை (38). இவா், அப்பகுதியில் ... மேலும் பார்க்க

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் நின்ற யானை: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சாலையில் யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை - பொள்ளா... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள அறிவுறுத்தல்

மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து கா... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று கூறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து கோவையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தி... மேலும் பார்க்க