அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆ...
வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை
வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பழைமையான மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதில், பெரும்பாலான மரங்கள் விழும் நிலையில் காணப்படுகின்றன. இதுபோல வால்பாறை நகரில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால் அய்யா்பாடி, வாட்டா்பால், புதுத்தோட்டம் உள்ளிட்ட எஸ்டேட் மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் உள்ள மரங்கள் வெட்டப்படவில்லை. எனவே, முக்கிய சாலைகளில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.