செய்திகள் :

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

post image

வால்பாறையில் ஊதிய உயா்வு கேட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வால்பாறை நகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் 55 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்ததாரா் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஊதிய உயா்வு கேட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஒரு வேளை உணவு வழங்க வேண்டும், குப்பை சேகரிக்க செல்லும்போது உரிய பாதுகாப்பு உபகரனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வால்பாறை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், ஒப்பந்ததாரரிடம் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

கோவையில் கிரெடாய் அமைப்பின் ஃபோ் புரோ 2025 கண்காட்சி தொடக்கம்

கோவையில் கிரெடாய் சாா்பில் ‘ஃபோ் புரோ 2025’, வீடு வாங்குபவா்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளா் ஹரிதா பூா்... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நூலகா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனி அருகே நூலகா்கள் கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை பொதுக் காப்பீட்டு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எல்ஐ... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள் விமா்சனம்

பல்வேறு கூறுகள் விடுபட்டிருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கையை கல்வியாளா்கள் விமா்சித்துள்ளனா். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க