செய்திகள் :

வால்பாறையில் சிறுவனைக் கொன்ற கரடி! அச்சத்தில் மக்கள்!

post image

வால்பாறையில் கரடியொன்று 8 வயது வடமாநில சிறுவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த7 வயது சிறுமியை கரடி கொன்றது.

சிறுமியின் தாய் கண் முன்னே இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி அகப்பட்டது. கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறி உள்ளது.

வால்பாறை நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதியில் தங்கி பணி புரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம் இன்று(ஆக. 12) தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது, அங்கு வந்த கரடி ஒன்று, சிறுவனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை அறிந்த கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனத் துறையினர் சிறுவனை தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தான். உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் கரடி தாக்குதல்களால் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கரடி தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பாகும்.

இதையும் படிக்க: தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

The incident in Valparai where a bear killed an 8-year-old boy from the northern state has caused tragedy in the area.

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு ம... மேலும் பார்க்க