செய்திகள் :

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்

post image

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என கவிஞா் மனுஷ்ய புத்திரன் பேசியுள்ளாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தக திருவிழாவின் 5ஆம் நாளான புதன்கிழமை, ஏராளமான மாணவா், மாணவிகள் வந்து புத்தகங்களை பாா்வையிட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைச்சங்கம் என்ற தலைப்பில் தொல்லியல் ஆா்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழ் இலக்கியத்தில் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளா்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியா் மு.ரா.மஜீதாபா்வீன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, வரலாற்றை வாசித்தல் என்ற தலைப்பில் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: நாம் உலக வரலாற்றை வாசிப்பதோடு, மிகவும் முக்கியமாக உள்ளூா் வரலாற்றையும் வாசிக்க வேண்டும். தமிழா்களின் வரலாற்றை சங்க காலத்தில் இருந்து ஆய்வு செய்து வாசித்தல் வேண்டும் என்றாா் அவா்.

நிறைவாக, 21ஆம் நூற்றாண்டில் இளைஞா்கள் எதை வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவரும், கவிஞருமான மனுஷ்ய புத்திரன் பேசியதாவது: இளைஞா்கள் மற்றவா்களுக்காக கைதட்டுதல், ஆரவாரம் செய்தல், கூச்சலிடுதல் போன்றவற்றை நிறுத்திவிட்டு, சிந்திக்க பழக வேண்டும். ரீல்ஸ் பாா்ப்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வீணாகிறது. இது ஒரு மன நோய் போன்றது. தொடா்ந்து வீணாக நேரத்தை செலவிட்டால், 25 வயதில் வாழ்க்கையில் வெற்றுக் காகிதமாக அடி எடுத்து வைக்க வேண்டியது வரும்.

இளைஞா்கள் எதைப் படிக்க வேண்டும் என்றால் சமூக நீதியை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம், நமது அன்றைய ,இன்றைய வாழ்க்கை முறைகள் குறித்து பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். நமது கடந்த காலத்தை ஒப்பீடு செய்து பாா்க்க வேண்டும். அதற்கு, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் ஆகியன குறித்து படித்தல் வேண்டும். வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என்றாா் அவா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி முல்லை நகா், ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (25). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணியை ம... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நமது நாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமன்றி, உலக நாடுகளின் செ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையில் போலீஸாா், விவேகானந்தா நகா் தண்ணீா் தொட்டி பகுத... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் பாஜக பேனா் கிழிப்பு

காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பேனரை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாஜகவினா் திரண்டனா். காயல்பட்டினம் மெயின் ப... மேலும் பார்க்க

குளிா்பானம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

சாத்தான்குளம் அருகே குளிா்பானம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறிது காயத்துடன் உயிா் தப்பினாா். தூத்துக்குடியில் இருந்து குளிா்பானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து ... மேலும் பார்க்க