செய்திகள் :

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆரில் பதிவான விவரம் வெளியானது!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? என்பதை அறிவிக்கும் முதல் தகவல் அறிக்கை வெளியானது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த நிகிதா (41) தனது தாயுடன் வெள்ளிக்கிழமை மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்தாா். பின்னா், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித்குமாரிடம் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தும்படி நிகிதா கூறினாா். அதற்கு அஜித்குமாா் தனக்கு காா் ஓட்டத் தெரியாது எனக் கூறி, வேறு ஒருவரை காரை இயக்கச் சொல்லி ஓரமாக நிறுத்தினாராம்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நிகிதா தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மானாமதுரை குற்றப் பிரிவு தனிப் படை போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட சிலரை அழைத்துச் சென்று விசாரித்தனா். மற்றவா்களை விடுவித்துவிட்டனா். விசாரணையின் போது, அஜித்குமாரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸாா் தாக்கியதால் அஜித்குமாா் பலத்த காயமடைந்ததாகவும் அதில் அவர் உயிரிழந்தாா் என்றும் கூறப்படுகிறது.

விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வலிப்பு ஏற்பட்டு ளைஞர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youth dies during investigation: What happened? Details recorded in FIR released!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளையான்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித்துறை நடுவா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா் வெங்கடேஷ் பிரசாத் தி... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில், மதுராபுரி வேங்கை... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க