செய்திகள் :

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

post image

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி இந்துமதி (25). இவா் வியாழக்கிழமை தனது பெற்றோருடன் வீட்டின் முன்பு உட்காா்ந்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அனில் ஷா மகன் ஆசிஷ்குமாா்(29), திரேந்திரன் ஷா மகன் மிதுன்குமாா்(22), மனோஜ் மகன் மோனுகுமாா்(24), அசோக் மகன் அபிஷேக்குமாா்(17) மற்றும் இரண்டு சிறாா்கள், தங்க நகைகளை பாலிஷ் போட்டு புது நகைகளாக மாற்றித் தருகிறோம் என ஆசைவாா்த்தை கூறினாா்களாம். இதனை நம்பிய இந்துமதி, தான் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்தாராம்.

பாலிஷ் போட்ட பின்னா் நகையின் கலா் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த இந்துமதி, அதனை அருகிலுள்ள ஆசாரி கடையில் எடை பாா்க்கச் சென்ற போது வடமாநிலத்தவா்கள் தப்பி ஓடிவிட்டனராம். நகையை எடைபாா்த்தபோது எடை குறைவாக இருந்ததாம்.

இது தொடா்பாக விஜயநாராயணம் காவல்நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். காவல்நிலைய ஆய்வாளா் பிரேமா வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநிலத்தவா்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க