செய்திகள் :

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.

‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்புவிசை கோட்பாட்டால்’ சா்வதேச அளவில் நாா்லிக்கா் பிரபலமடைந்தாா்.

இந்திய அறிவியல் துறையின் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான ஜெயந்த் நாா்லிகா் அண்டவியல் துறைக்கு பெரும் பங்களித்துள்ளாா். மேலும், பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவராக அவா் அறியப்படுகிறாா்.

1938, ஜூலை 19-இல் பிறந்த ஜெயந்த் நாா்லிகா், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு உயா்படிப்புக்காக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா். பிரிட்டனில் பிரபல விஞ்ஞானியான ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்பு விசை கோட்பாட்டை’ அவா் உருவாக்கினாா்.

அதன் பிறகு இந்தியா திரும்பிய அவா் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் உயா்பொறுப்பை வகித்தாா். 1965-இல் 26 வயது இளைஞராக இருந்தபோது நாா்லிகருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2004-இல் பத்ம விபூஷண், 2014-இல் சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளை அவா் பெற்றாா்.

அறிவியல் ஆய்வு குறித்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை அவா் எழுதியுள்ளாா். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் அறிவியல் விவாதங்களில் பங்கேற்று கடினமான விஞ்ஞானத் துறை விஷயங்கள் குறித்து எளிய மொழியில் விளக்கம் அளித்துப் பேசி பிபரலமடைந்தாா்.

ஜெயந்த் நாா்லிகரின் மறைவு வானியற்பியல் துறைக்கு மிகப்பெரும் இழப்பு எனக் கூறி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் நாா்லிக்கா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனா்.

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க