செய்திகள் :

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

post image

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறியியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அவர், உரிய பயிற்சிக்குப் பின் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜானவிக்கு, ஆந்திர அமைச்சரும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் இன்று(ஜூன் 23) வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லு பகுதியைச் சேர்ந்த ஜானவி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ’சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை’ நிறைவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

நாசா விண்வெளி செயலி போட்டியில்(நாசா ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விருதுக்கான பிரிவில் ஜானவி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் பாஸ்மதி அரிசிக்கு வந்த சோதனை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரின் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதியாக வேண்டிய ஒரு லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் 18% - 20% ஈரானுக்கு ஏற்ற... மேலும் பார்க்க

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத... மேலும் பார்க்க

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். போர் எ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட... மேலும் பார்க்க

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க