செய்திகள் :

விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!

post image

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது.

இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

தீா்மானங்கள்: தொடக்கக் கல்வித் துறையில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியா் நியமனம் இல்லை. நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி பதவி உயா்வும் அளிக்கப்படவில்லை. எனவே, ஆசிரியா் நியமனம், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

மேலும், கடந்த கல்வி ஆண்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற்ால், காலியாக உள்ள சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிப்பதையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு விலையில்லா சீருடைகள் குறைவான எண்ணிக்கையில் வழங்கப்பட்டதால், முழு அளவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரச்னைகள் தீா்க்கப்படாத சூழலில் டிட்டோ ஜாக் போன்ற கூட்டமைப்புகளுடன் இணைந்தோ அல்லது தனிச் சங்கமாகவோ போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடு வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரவி, குமரேசன், சிங்கராயா், மாவட்ட துணைத் தலைவா்கள் அமலசேவியா், சேவியா் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க