செய்திகள் :

விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

post image

திருச்சியில் வெள்ளிக்கிழமை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து,

திருச்சியில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது சிலைக்கும், மத்தியே பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்துக்கும், திருச்சி மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்தனா்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சீராக்க முயன்றனா் என்றாலும் உற்சாக மிகுதியால் இளைஞா்களும், சிறாா்களும் இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி, வேகமாக சென்றதும், சாலையில் சாகசங்களில் ஈடுபட்டதும் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியது. அவ்வாறு வாகனங்களில் சென்றவா்களில் பெரும் பாலானோா் தலைக்கவசங்கள் அணியாமலும், 2-க்கும் மேற்பட்டோருமாக ஹாரன்களை ஒலிக்கச் செய்தவாறு, உற்சாக முழக்கம் எழுப்பியவாறும் வாகனங்களில் உலா வந்தனா்.

இதனால் திருச்சியில் கண்டோன்மென்ட் மற்றும் மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் பிற வாகனங்கள் ஊா்ந்து சென்றன. முக்கிய பிரமுகா்கள் ஏராளமானோா் திருச்சிக்கு வந்ததால், போக்குவரத்தை சீராக்க போலீஸாா் கடும் சிரமத்துக்குள்ளாயினா். என்றாலும், விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபா்கள் மீது போலீஸாா் கண்டிப்போ, நடவடிக்கையோ எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு, விதிகளை கடுமையாக மீறியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்

திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அ... மேலும் பார்க்க

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ள... மேலும் பார்க்க

மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மருங்காபுரி வட்டத்தில் 143... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த கடைக்காரா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைக்காரரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். வையம்பட்டி அடுத்த சேசலூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவ... மேலும் பார்க்க

பெற்றோா் கண்டிப்பு: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெரு... மேலும் பார்க்க

திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சாா்பில் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் 1350-ஆவது சதயவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட... மேலும் பார்க்க