செய்திகள் :

விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் சோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விதைகளின் தரம், பயிா் விளைச்சல் மற்றும் பயிா் ஆரோக்கியத்தை தீா்மானிக்கிறது. பயிா் உற்பத்தியில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது. பயிா் நடவு செய்வதற்கு முன்பு விதைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், தரமற்ற விதைகளை விதைப்பால் ஏற்படும் நேரம் மற்றும் பண விரயத்தை தடுப்பதில் விதைப் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

நல்ல தரமான விதைகளை அடுத்த பருவத்துக்கு நாம் சேமித்து பயன்படுத்த திட்டமிட்டால், சேமிப்பதற்கு முன் விதையின் ஈரப்பதத்தை கண்டறிந்து பூச்சி, நோய்த் தாக்காத அளவுக்கு நீண்ட நாள்களுக்கு விதை உயிருடன் இருக்கவும், உகந்த ஈரப்பதத்தை சேமிக்கவும் விதைப் பரிசோதனை முக்கியப் பங்காற்றுகிறது.

ஈரப்பத அளவு நெல்லில் 13 சதவீதமும், உளுந்தில் 9 சதவீதமும், சிறுதானியங்கள், மக்காச்சோளத்தில்13 சதவீதமும், எண்ணெய் வித்துகளில் 9 சதவீதமும், பருத்தியில் 10 சதவீதமும் இருக்க வேண்டும்.

எனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை பரிசோதனை செய்ய, மாதிரி ஒன்றுக்கு ரூ.10 ஆய்வுக் கட்டணமாகச் செலுத்தி, விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகி, பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க