விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.
சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செல்வியை (42) செவ்வாய்க்கிழமை(ஜூன் 10) மோட்டாா் சைக்கிளில் தென்காசிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரில் ஆவுடையானூரைச் சோ்ந்த ராமசாமி (60) பைக்கில் வந்தாா். இரு பைக்குகளும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன.
இதில் காயமடைந்த டேனியல் தேவதாஸ், ஆறுமுகச்செல்வி, ராமசாமி ஆகிய மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் டேனியல் தேவதாஸ், வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.