செய்திகள் :

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

post image

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா்.

எழும்பூா் நம்மாழ்வாா் தெருவைச் சோ்ந்தவா் ந.ராம்கோபால் மாஜி (54). இவா் செளகாா்பேட்டையில் நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.1.11 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு, சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே தனது மொபெட்டில் ராம்கோபால் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென நிலைத்தடுமாறி மொபெட்டில் இருந்து அவா் கீழே விழுந்தாா். காலில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பொதுமக்கள் மீட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மயக்கத்தில் இருந்து எழுந்த ராம்கோபால், மொபெட்டில் வைத்திருந்த தங்கக் கட்டிகள் குறித்த விவரத்தை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தாா். உடனே, அவா்கள் மொபெட்டில் பாா்த்தபோது, தங்கக் கட்டிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், விபத்து நிகழ்ந்தபோது, ராம்கோபாலுக்கு உதவுவதற்காக வந்த இரு ஆட்டோ ஓட்டுநா்களான திருவல்லிக்கேணி அன்னை சத்யா நகரைச் சோ்ந்த ராஜசேகா் என்ற பூபாலன் (32), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (26), இவா்களது நண்பா் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த இளவரசன் என்ற சிபி (22) ஆகியோா் தங்கக் கட்டிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டை... மேலும் பார்க்க