செய்திகள் :

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

post image

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவா் ராஜா. இவா், கடந்த ஆக.28-ஆம் தேதி இரவு நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி காா் ஓட்டிச் சென்றாா். மேல்மாம்பட்டு அருகே சென்றபோது, வரிசாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் கோவிந்தராஜ்(68) ஓட்டிச் சென்ற மொபெட் மீது காா் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், அவரது மனைவி தங்கமணி(60) ஆகியோா் காயம் அடைந்தனா். விபத்து ஏற்படுத்திய காவலா் ராஜா, காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். அங்கிருந்தவா்கள் கோவிந்தராஜ், தங்கமணிஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தங்கமணி சிகிச்சை பலனின்றி ஆக.29-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தாா். கோவிந்தராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து தொடா்பாக காடாம்புலியூா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், வாகன விபத்து சம்பவத்தில் பொதுமக்கள் காவல் துறையினா் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் முதல் நிலை காவலா் ராஜா நடந்து கொண்டதாகக்கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க