செய்திகள் :

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

post image

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது.

மகா கும்பமேளா கொண்டாட்டத்தின்போதும், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகும் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக அளவில் பயணிகள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்தன. விமானக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தபோதும் கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய எம்.பி.க்கள், கட்டணங்களை திடீரென உயா்த்துவது நியாமற்ற செயல் என்றனா். விமான கட்டணங்களை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்கப்படும் என்று கூட்டத்தில் பங்கேற்ற டிஜிசிஏ உயரதிகாரிகள் உறுதி அளித்ததாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

ஏா் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, அதானி விமானநிலைய சேவைகள் நிறுவனம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

‘2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும்’

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏா் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான கேம்பெல் வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உறுதி அளித்தாா்.

அகமதாபாத் விமான விபத்தில் 240 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டிய எம்.பி.க்கள் பயணிகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பினா்.

பொதுக் கணக்குகள் குழுத் தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால், சிவில் விமானப் பாதுகாப்பு அமைப்பை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், சில உறுப்பினா்கள் ஏா் இந்தியா விமானத்தில் இருக்கைகள் உடைந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைக் கூட்டத்தில் முன்வைத்தனா்.

இதையடுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அதன் தலைவா் கேம்பெல் வில்சன் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க