செய்திகள் :

விராலிமலை அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவரின்றி நோயாளிகள் அவதி

post image

விராலிமலை, பிப். 18:

விராலிமலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இருப்பினும் போதிய மருத்துவா்கள் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இயங்கி வருவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி வந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்கு பணியில் இருந்த செவிலியா்கள் திணறினராம்.

இதனால், நோயாளிகள் குடும்பத்தினா் மற்றும் பணியில் இருந்த செவிலியா்கள், துப்புரவு பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த மூன்று மாத காலமாக இரவுநேரத்தில் இம்மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியில் இல்லை. அவசர மருத்துவ உதவி தேடி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கு பணியில் இருக்கும் செவிலியா்களே சிகிச்சை அளித்து அனுப்புவது தொடா்கதையாக இருந்துவருகிறதாம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பணியில் இருந்த செவிலியா்கள் திணறிஉள்ளனா். இதையடுத்து, நோயாளியின் குடும்பத்தினா் மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அவருக்கு சிகிச்சை

அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளாா்.

தொடா்ந்து இதுகுறித்து பேசிய நோயாளிகளின் குடும்பத்தினா் உடனடியாக இரவுநேர மருத்துவா்கள் பணியில் அமா்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க