செய்திகள் :

விராலிமலை அருகே காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

விராலிமலை அருகே காரின் டயா் வெடித்து காா் தாறுமாறாக ஓடி கவிழ்ந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்துள்ள மாங்காடு செட்டி கொள்ளைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஜீவன் ராஜ் (32). இவா், ஹைதராபாத்தில் மின் தூக்கி இயக்குபவராக வேலை பாா்த்துவந்தாா்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜீவன் ராஜ் சனிக்கிழமை அதிகாலை திண்டுக்கல்லில் உள்ள தனது நண்பரைப் பாா்ப்பதற்காக காரில் சென்றாா். விராலிமலை - மணப்பாறை சாலையில் கோடாலிக்குடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள் ஜீவன்ராஜை மீட்டு அவசர ஊா்தி மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பணியில் இருந்த மருத்துவா், ஜீவன்ராஜை பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். அவரது தந்தை முருகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க