செய்திகள் :

விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அமைச்சர்!

post image

விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு முன்பாக, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிர்வாகிகள்
பொதுக்கூட்டம்

இதில் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலரும் போட்டிப்போட்டு முன்னாள் அமைச்சர்களுக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் மரியாதை செய்ய முண்டியடித்துக் கொண்டனர். அப்போது கையில் சால்வையுடன் மேடைக்கு வந்த கட்சி நபர் ஒருவர், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மரியாதை செய்ய முயற்சித்துள்ளார். அந்த சமயம் திடீரென கோபமடைந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, சால்வை அணிவிக்க வந்த தொண்டரை தனது கையால் அடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சமாதானப்படுத்திய கட்சி நிர்வாகிகள், தொடர்ந்து நிகழ்ச்சி சுமுக முறையில் நடைபெறுவதற்கு உதவினர்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கட்சித் தொண்டரை தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கட்சியினரிடம் கேட்கையில், ``இது சுமுகமாக முடிந்துவிட்ட பிரச்னை. இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை சாதாரண விஷயத்தை எதிரி கட்சியினர் ஊதிப் பெரிதாக்குகின்றனர்" என்றனர்.

Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு நாயுடு

மும்மொழிக் கொள்கையைத் தமிழக ஆளும் திமுக அரசு, இந்தித் திணிப்பு என்று அரசியலாக்கி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகவும், ஏற்காவிட்டால் கல்விக்கு இரண்டாயிரம் கோடி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் ... மேலும் பார்க்க

கரூர்: `காலை முதல் இரவு வரை!' - செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற 12 மணி நேர சோதனை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில், அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் ராயனூர் வீடு, ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 - க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியிருக்க பைடனின் அரசியல் காரணமா... துணை வீரர் சென்னதென்ன?

நீண்ட நாள்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பாததற்கு அரசியலே காரணம் என்ற எலான் மஸ்க்கின் கருத்து சரியானது என்று வழிமொழிந்துள்ளார், விண்வெளி நிலையத்... மேலும் பார்க்க

`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமா... மேலும் பார்க்க

தெலங்கானா: மத அடையாளங்களை அகற்றக் கூறி மாணவர்களை தாக்கிய பள்ளி முதல்வர் - கொதித்தெழுந்த பெற்றோர்கள்!

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டோர் ஷைன் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முதல்வர் லட்சுமய்யா, மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததைக் கண்டி... மேலும் பார்க்க