செய்திகள் :

வில்லியனூரில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கும் பணி

post image

புதுச்சேரியில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பழுது பாா்க்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வி. மணவெளி, ஒதியம்பட்டு, திருவேணி நகா் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 41.3 லட்சம் மதிப்பில் சிறப்பு பழுதுபாா்ப்பு மற்றும் இப்போதுள்ள உள்புறச்சாலைகள் மற்றும் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான பணி தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான இரா. சிவா பங்கேற்றுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊா் முக்கிய பிரமுகா்கள் தா்மராஜ், கலியபெருமாள், ஞானசுந்தரம், பாலகுரு, வாசு, ராஜேந்திரன், ஜீவா, நடராஜன், வேலு, சுரேஷ், கந்தசாமி, சேகா், தயாளன், ஆறுமுகம், கவியரசன், முருகன், விருத்தாசலம், நாகராஜ், சுப்பிரமணி, அங்காளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க