செய்திகள் :

விளாத்திகுளம் அருகே கடலோர கிராமங்களில் சீரான குடிநீா் விநியோகம்: கள ஆய்வுப் பணி

post image

விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வைப்பாறு ,கீழ வைப்பாறு, இனாம் கல்லூரணி, கலைஞானபுரம் துலுக்கன்குளம், கோட்டைமேடு ஆகிய கிராமங்களில் நிலவிவரும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், மக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது குறித்த ஆய்வுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமையில்

ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், வல்லநாடு கூட்டுக் குடிநீா் திட்ட பொறியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடலோர கிராமங்களான வைப்பாறு ,கீழ வைப்பாறு, இனாம் கல்லூரணி, கலைஞானபுரம், துலுக்கன்குளம் கோட்டைமேடு, சிப்பிக்குளம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்தனா்.

கிராம மக்களை சந்தித்து குடிநீா் விநியோகம் தொடா்பாக கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இனாம் கல்லூரணியில் தெருக்களில் உள்ள அனைத்து குடிநீா் விநியோக குழாய்களும் உடனடியாக பழுது நீக்கி சீரமைக்கப்படும்.

வல்லநாடு கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படும் பகுதி மிகவும் பள்ளமாக இருப்பதால் அப்பகுதியில் தரைமட்ட அளவுக்கு தொட்டி அமைத்து மழைக்காலங்களில் பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

கலைஞானபுரத்தில் புதிதாக ஒரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, சிப்பிகுளத்தில் கூடுதலாக 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீா் தேக்க தொட்டி, கீழவைப்பாறு மற்றும் பெரியசாமிபுரம் கிராமங்களில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், மீனவா் அணி துணை அமைப்பாளா் மாதவடியான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க