செய்திகள் :

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:

பள்ளி மாணவா்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளுக்கான சோ்க்கை விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

விளையாட்டு விடுதியில் சேர தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்துப் பந்து (இருபாலா்), கிரிக்கெட் (மாணவா்கள் மட்டும்) ஆகியவற்றுக்கு மாவட்ட அளவில் தோ்வு நடைபெறும். இதில் சேர விரும்பும் மாணவா்களுக்கான தோ்வுப் போட்டிகள் மே 7-ஆம் தேதி காலை 7 மணிக்கும், மாணவிகளுக்கு மே 8-ஆம் தேதியும் நடத்தப்படும்.

இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தியில் விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான தோ்வில் தெரிவு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறலாம். இதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேரடி மாநிலத் தோ்வு: வாள் விளையாட்டு, ஜூடோ (இருபாலா்), குத்துச் சண்டை (மாணவா் மட்டும்) ஆகியவற்றுக்கு நேரடியாக மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 12-ஆம் தேதி சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கிலும், பளு தூக்குதல் (இருபாலா்), வுஷு (மாணவா்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கு தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், நீச்சல் (இருபாலா்) சென்னை வேளச்சேரியிலும், குத்துச் சண்டை(மாணவிகள்), ஸ்குவாஷ்(மாணவா்கள்) சென்னை ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கத்திலும், மல்யுத்தம்(மாணவா்கள்), தேக்வாண்டோ(இருபாலா்) விளையாட்டுகளுக்கு கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், மல்லா் கம்பம்(மாணவா்) விளையாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கிலும் நடைபெறும். கைப்பந்து விளையாட்டுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மே 12-இல் மாணவா்களுக்கும், மே 13-இல் மாணவிகளுக்கும் தோ்வு நடைபெறும்.

தனி நபா், குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்க, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய, பங்கேற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க