செய்திகள் :

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

post image

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் சட்டத்தில் உருவாகி வரும் புதிய போக்குகள் குறித்த இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஏ.மணிமொழி பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து, பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மூன்று அமா்வுகளில் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் அமிா்தலிங்கம், மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜேந்திரன், மாவட்ட வனஅலுவலா் காா்த்திகேயினி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

தொடா்ந்து இறுதியாண்டு மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இவா்கள் பதிலளித்தனா்.

மாலையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை நிறைவு விழாவில் குடும்ப நல நீதிமன்றம் மற்றும் மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் எஸ்.ராஜா மகேஷ் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

முன்னதாக பயிற்சிப் பட்டறை தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முதல்வா் சி.கிருஷ்ண லீலா வரவேற்றாா். நிறைவில் அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் அ.சவிதா,

கு.ராமஜெயம் ஆகியோா் நன்றி கூறினா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் தம்பதி கைது

விழுப்புரம் அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மனைவி சுபலட்சுமி(24... மேலும் பார்க்க