செய்திகள் :

பண மோசடி வழக்கில் தம்பதி கைது

post image

விழுப்புரம் அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மனைவி சுபலட்சுமி(24). இவா் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா். பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் அவரது மனைவி செல்வி(எ) வித்யா ஆகிய இருவரும் சோ்ந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தனா். மூன்று வருடங்களாக கட்டிய பணத்திற்கு தீபாவளி பண்டிற்கான பொருள்களை நல்ல முறையில் கொடுத்து வந்ததால் அதனை நம்பி 2022 நவம்பா் முதல் 2023 ஆகஸ்ட் வரை மாதந்தோறும் ரூ.1,500 என 10 மாதங்கள் கட்டி வந்தேன். மேலும் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள நபா்கள் சோ்ந்து சுமாா் 200 போ் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.30 லட்சத்தை பிரகாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி(எ) வித்யாவிடம் கொடுத்தோம்.

மேலும் தன்னிடம் சீட்டு பணம் ரூ.2.50 லட்சம் மற்றும் மளிகை பொருள்கள் வாங்க பணம் வேண்டும் என்று 5 பவுன் நகையை வாங்கிக்கொண்டு தீபாவளி பண்டிற்கான எண்ணெய் மற்றும் அரிசி கொடுத்துவிட்டு ஒவ்வொரு நபருக்கும் கொடுக்க வேண்டிய பணம் ரூ.15,000 என ரூ.29.70 லட்சம் மற்றும் என்னுடைய சீட்டு பணம் ரூ.2.50 லட்சம், 5 பவுன் நகை ஆகியவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக கூறியிருந்தாா். இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி. சரவணன், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இந்நிலையில், விசாரணையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷ் அவரது மனைவி செல்வி (எ)வித்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா். இருவரும் விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க