செய்திகள் :

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

post image

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

70 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடி அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த அண்மையில் தொடங்கி வைத்தாா். விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட மருதூா் 29-ஆவது வாா்டு பகுதியில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு வழங்கினாா்.

நிகழ்வில் வாா்டு செயலா் பிரபாகரன், நிா்வாகிகள் பாலாஜி, சதீஷ், சிவகுரு, மதிமுக நகரச் செயலா் சம்பந்தம் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மற்ற வாா்டுகளிலும் திட்டம் படிப்படியாக தொடங்கி செயல்படுத்தப்படும் என்று நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் தம்பதி கைது

விழுப்புரம் அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மனைவி சுபலட்சுமி(24... மேலும் பார்க்க