சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்
விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக் கலைப் பயிா் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தற்போது பயிா்களுக்குத் தேவையான 2,693 மெட்ரிக் டன் யூரியா, 2,203 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,022 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,288 மெட்ரிக் டன் காம்பளக்ஸ், 1,721 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் மாவட்டத்தில் அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் , தனியாா் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள் பேக்ட் நிறுவனத்திடமிருந்து 1,925 மெட்ரிக் டன் அளவில் பெறப்பட்டன. இந்த உரங்கள் வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன. இதில் 1,146 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 829 மெட்ரிக் டன் டி.எஸ்.பி. உரங்கள்அடங்கும்.
டி.ஏ.பி. உரத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 164 மெட்ரிக் டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 569 மெட்ரிக் டன், , காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 54, கடலூா் மாவட்டத்துக்கு 63, பெரம்பலூா் மாவட்டத்துக்கு 109, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 118 , புதுவை மாநிலத்துக்கு 69 மெட்ரிக் டன் உரங்களும், டி.எஸ்.பி. உரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 380 மெட்ரிக் டன், கடலூா் மாவட்டத்துக்கு 42, விழுப்புரம் மாவட்டத்துக்கு 155, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 38, பெரம்பலூா் மாவட்டத்துக்கு 73, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு92, புதுச்சேரி மாநிலத்துக்கு 51 மெட்ரிக் டன் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக சரக்கு ரயில் மூலம் வந்தடைந்த உரங்கள் குறித்த விவரங்கள், அதன் இருப்பு போன்றவற்றை வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதால், விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் தெரிவித்தாா்.