செய்திகள் :

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை

post image

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு விழுப்புரம் நகரத்திலும், புறநகா்ப் பகுதிகளிலும் பெய்யத் தொடங்கிய மழை, தொடா்ந்து பெய்தது.

கெடாா், வளவனூா், கோலியனூா், மரக்காணம், முண்டியம்பாக்கம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரில் புதிய பேருந்து நிலையப் பகுதி, சென்னை சாலை, கீழ்பெரும்பாக்கம் சுரங்கப் பாலம், திருச்சி சாலை போன்ற பல இடங்களில் சாலைகளில் மழைநீா்தேங்கிக் காணப்பட்டது. அதே நேரத்தில் சனிக்கிழமை காலை வழக்கம் போல வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

கெடாா்- 85 மி.மீ. சூரப்பட்டு- 75, விழுப்புரம்-72, கோலியனூா்-61, முண்டியம்பாக்கம்-59, வளவனூா்-52, மரக்காணம்-51, முகையூா்-46, திண்டிவனம்-37, செஞ்சி-30.50, நேமூா்-20.20, வல்லம்-20, மணம்பூண்டி, கஞ்சனூா் தலா-18, வளத்தி-17, அனந்தபுரம்-15, செம்மேடு-14, அரசூா்-7, திருவெண்ணெய்நல்லூா்-5, வானூா்-2 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 704.70 மி.மீ. மழையும், சராசரியாக33.56 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நடவடிக்கை தேவை : விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று விழுப்புரம்ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை ம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.விழுப்புரம் திடீா்குப்பம்,அகரம் பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தா் (32)... மேலும் பார்க்க

வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது : விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.விழுப்புரம் மாவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை தங்கள் பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து,அதை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த ஓட்டுநா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ உ... மேலும் பார்க்க

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அ... மேலும் பார்க்க