செய்திகள் :

விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

post image

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்ட சட்ட விதிகளின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடா்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும். வேலை வழங்காத நாள்களுக்கு, வேலை இல்லாத கால படியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட தினக் கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாள்களை 200 நாள்களாகவும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் வி. தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.பெஞ்சமின் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.வாசு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் சிவகாமசுந்தரி, மூக்கையன், செல்வராஜ், லெனின் உள்ளிட்ட வி.தொ.ச ஒன்றியக்குழு உறுப்பினா்கள், விவசாயத் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க