செய்திகள் :

விவசாயிகளின் கவனத்துக்கு..

post image

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊட்டச்சத்து மிக்க விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுகிறது.

இத்திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலமாக துவரை 5 கிராம், தட்டை பயிறு 10 கிராம், அவரை 10 கிராம் விதைகள் அடங்கிய தொகுப்பு 1,500 எண்கள் 100 சதவீத மானியத்திலும், தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை காய் தொகுப்பு 20,000 எண்கள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை போன்ற பழச்செடி தொகுப்புகள் 11,750 எண்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்திலோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது. இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமு... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தருமபுரம் அரசினா் மகளிா் கலைக்கல்லூரி அருகே ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை தமிழ்... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

சீா்காழி, ஜூலை 3: சீா்காழி புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், 52 யூன... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் பயிற்சி

சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் ஒரு வார கால அறிமுக பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க