செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்

post image

காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன்சாரி புதன்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 26 அதிகாரிகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், பல துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

ஒரு வேளாண் அலுவலா் தவிர பிற வேளாண் அலுவலா்கள் பங்கேற்கவில்லை. ஒரு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை தவிர பிற கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி, காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா், பாசிக் நிறுவன மேலாண் இயக்குநா், கூட்டுறவு வங்கி அதிகாரி, இந்திய உணவுக் கழக அதிகாரி, காப்பீட்டு நிறுவன அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. மீன் வளத்துறை அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் ஏப். 27-ஆம்... மேலும் பார்க்க

வேளாண் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோய... மேலும் பார்க்க