செய்திகள் :

`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

post image

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வரும் ஜூன் 20ம் தேதி அன்று நத்தம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்திருக்கிறது.

மாம்பழம்

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "‘மா’ விவசாயிகள் விவகாரம் - அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தென் மாவட்ட ‘மா' விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" - திருமா சொல்வதென்ன?

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன... மேலும் பார்க்க

தரமணி: தொழில்நுட்பக் கல்லூரி சாலையின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

சென்னை தரமணி, மத்திய தொழில்நுட்பக் கல்லூரி(CPT) நுழைவு வாயில் ஒட்டி பிரியும் சாலை, பரபரப்பான ராஜிவ் காந்தி சாலையையும், குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் , பள்ளிப்பட்டு, களிகுன்றம் போன்ற பகுதிகளையும... மேலும் பார்க்க

அணைக்கட்டு: தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று அபாயம்- அரசு பள்ளியை கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபத்தில் வேலூரில்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்; பாழாகும் சிறுவர் பூங்கா... சீரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் குழந... மேலும் பார்க்க

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களு... மேலும் பார்க்க