செய்திகள் :

விவாகரத்தில் ரூ.5 கோடி பெற்ற பெண்ணிடம், திருமண ஆசைகாட்டி ரூ.3.60 கோடி மோசடி செய்த இளைஞர்

post image

புனேயை சேர்ந்த பெண் ஒருவரை லக்னோவை சேர்ந்த நபர் திருமண ஆசை காட்டி ரூ. 3.60 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 35 வயது பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதன் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்தது. அப்பணத்தை கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று நினைத்து திருமண பதிவு இணையத்தளத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர் தனது பெயர் ரோஹித் பவார் என்றும் ஆஸ்திரேலியாவில் டாக்டராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர்.

ரோஹித் பவார் புனே வந்து அப்பெண்ணுடன் தங்கி இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணிடம் ரூ.5 கோடி இருப்பதை ரோஹித் தெரிந்து கொண்டார்.

இதையடுத்து அப்பெண்ணிடம் புதிய தொழிலில் முதலீடு செய்தால் சர்வதேச அளவில் உயர முடியும் என்று அப்பெண்ணிடம் ரோஹித் தெரிவித்தார். அதோடு இரண்டு பேரை அப்பெண்ணிடம் அறிமுகம் செய்து இவர்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

அவர்கள் இரண்டு பேரும் அப்பெண்ணிடம் பேசி அவரிடமிருந்த ரூ.3.60 கோடியை பல்வேறு வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய வைத்தனர். அப்பணத்தை வாங்கிக்கொண்ட பிறகு ரோஹித் தனக்கு வாயில் புற்று நோய் இருப்பதாக கூறி படிப்படியாக அப்பெண்ணுடனான தொடர்பை குறைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருடனான தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

கைது

திடீரென கடந்த செப்டம்பர் மாதம் அப்பெண்ணிற்கு ஒரு மெயில் வந்தது. அதில் ரோஹி இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த அப்பெண் இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்தார். அவர் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் இது குறித்து புனே போலீஸில் புகார் செய்யப்பட்டது.

புனே போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் சொந்த ஊர் லக்னோ என்றும், அவரது உண்மையான பெயர் அபிஷேக் சுக்லா என்றும் தெரிய வந்தது. அவரது நடமாட்டத்தை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சிங்கப்பூரில் இருந்து மும்பை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் மும்பை விமான நிலையத்தில் அபிஷேக் சுக்லாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர் ரோஹித் என்ற பெயரை பயன்படுத்தி 3194 பெண்களுக்கு மேட்ரிமோனியல் மூலம் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மேலும் பல பெண்களை அவர் மோசடி செய்திருப்பார் என்று தெரிவித்துள்ள புனே போலீஸ் கூடுதல் கமிஷனர் தேஷ்முக் அது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். அபிஷேக்கிடம் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Tiger Death: மாட்டிறைச்சியில் பூச்சி மருந்து.. துடிதுடித்து மடிந்த 5 புலிகள்; வனத்தில் என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டதில் உள்ள மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று முன்தினம் 5 புலிகள் ஒரே இடத்தில் இறந்துக் கிடப்பதைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தாய்புலி மற... மேலும் பார்க்க

தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் ... மேலும் பார்க்க

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்... மேலும் பார்க்க

தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவ... மேலும் பார்க்க

Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களு... மேலும் பார்க்க

கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி

கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க