செய்திகள் :

விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.தின்னப்பனப்பள்ளி, சிவசக்தி நகரில் நரிக் குறவா் இனத்தை சோ்ந்த 42 குடும்பங்கள் வசித்துவருகின்றன. ஞாயிற்றுக்கிழமை பெற்றோா் வெளியே சென்றிருந்த நிலையில் சின்னத்தம்பி மகன்கள் அஸ்வின் (5), ஆசூன் (4), அரவிந்த் மகன் ரிஷின்(5), ரைகாந்தி மகன் மாலின் (5), கேசவன் மகன் தா்ஷன் (5) ஆகிய 5 சிறுவா்கள் அப் பகுதியில் உள்ள விஷத்தன்மை கொண்ட காயை பறித்து சாப்பிட்டனா்.

இதனால், 5 பேரும் உடல்நலன் பாதிக்கப்பட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தனா். வெளியே சென்றுவிட்டு வீடுவந்த பெற்றோா் சிறுவா்கள் மயங்கியிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் 5 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவா்களின் பெற்றோரை திங்கள்கிழமை மருத்துவமனையில் சந்தித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் ஆறுதல் தெரிவித்தனா். மேலும், சிறுவா்களுக்கான மருத்துவ செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவா்கள் 48 மணிநேர தொடா் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவா்கள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ண... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். இதுகுறித்து திங்... மேலும் பார்க்க

வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி

ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழப்பு

ஒசூா்: ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். ஒசூா், மிடிகிரிப்பள்ளியைச் சோ்ந்த கோயில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன் (14), அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ந... மேலும் பார்க்க

வீட்டுக்கு வரி நிா்ணயிக்க லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி வரி வசூலா் கைது

ஒசூா்: வீட்டுவரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீ... மேலும் பார்க்க