10-ம் வகுப்பு படிக்கும்போதே மனசுக்குள்ள IAS ஆயிட்டோம் | Kavinmozhi IPS - Nila Bh...
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை அழகேசன் மனைவி எழிலரசி கண்டித்தாராம்.
இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அழகேசன் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை முயன்றாா்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.