செய்திகள் :

விஸ்வரூபம் எடுக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு - விசாரணை வளையத்தில் ஏடிஜிபி ஜெயராமன், எம்.எல்.ஏ!

post image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு அருகே உள்ள களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்ய ஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதையடுத்து காதல் ஜோடி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை வித்யஸ்ரீயின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய மகளைக் கடத்தி விட்டதாக தனுஷ் மீது திருவலாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் இருவரும் மெஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதித்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷின் தம்பியான 17 வயது சிறுவன் வீட்டில் இருந்தபோது அவரை ஒரு கும்பல் காரில் கடத்தியது.

பூவை ஜெகன்மூர்த்தி

இதுதொடர்பாக தனுஷின் குடும்பத்தினர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவலாங்காடு போலீஸார் விசாரணை நடத்திய தனுஷின் தம்பியைக் கடத்திய குற்றத்துக்காக விஜயஸ்ரீயின் அப்பா வனராஜா, அவரின் உறவினர்கள் கணேசன், மணிகண்டன், புரோக்கராக செயல்பட்ட முன்னாள் காவலர் மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

காதல் டு கடத்தல்!

இதுகுறித்து திருவலாங்காடு போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பெண்ணின் அப்பா வனராஜா, தொழிலதிபராக உள்ளார். அதோடு தனுஷ்வுடன் மகள் விஜயஸ்ரீ வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் எவ்வளவு செலவானாலும் தன்னுடைய மகளை தனுஷிடமிருந்து பிரித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வனராஜா முடிவு செய்திருக்கிறார். அப்போதுதான் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மகேஷ்வரியின் அறிமுகம் வனராஜாவுக்கு கிடைத்திருக்கிறது.

உடனே மகேஷ்வரி மூலம் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் ஏடிஜிபி ஜெயராமனின் உதவியை வனராஜா கேட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு கே.வி.குப்பம் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியையும் சந்தித்து வனராஜா தரப்பு பேசியிருக்கிறது. பின்னர் தனுஷ் வீட்டுக்குச் சென்ற இந்தக் கும்பல் விஜயஸ்ரீயை குறித்து விசாரித்திருக்கிறது. அங்கு விஜயஸ்ரீ, தனுஷ் ஆகியோர் இல்லாததால் தனுஷின் தம்பியான 17 வயது சிறுவனைக் காரில் கடத்தியிருக்கிறது.

ஏடிஜிபி ஜெயராமன்

சிறுவனைக் கடத்திய காரில் போலீஸ் என்றும் சைரன் வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததும் அதுதொடர்பாக விசாரித்தபோது ஏடிஜிபி ஜெயராமனின் கட்டுப்பாட்டிலிருக்கும் கார் எனத் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரித்தபோது இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஜெகன்மூர்த்தியும் ஏடிஜிபி ஜெயராமனும் மறைமுகமாக உதவியிருப்பது தெரியவந்ததால் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தோம். அதற்காக ஜெகன்மூர்த்தியின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் ஆதரவாளர்கள், கட்சியினர் எங்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பிறகு வீட்டுக்குள் சென்றோம். ஆனால் அங்கு ஜெகன்மூர்த்தி இல்லை.

இந்தச் சூழலில்தான் முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அப்போது எங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததில் ஏடிஜிபி ஜெயராமன் ஜெகன்மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தனுஷ் - வித்யஸ்ரீ சொல்வதென்ன?

இந்த பரபரப்பான சூழலில் தனுஷ் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது இருவரும் கூறுகையில், ``எனது தம்பியை வீட்டிலிருந்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று தண்டலம் தனியார் ஹோட்டல் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் அந்தக் கும்பல், தம்பியை எங்கள் ஊர் அருகே பெட்ரோல் பங்க் அருகில் இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. அவர்களை நாங்கள் பார்த்ததும் இல்லை. அவர்களும் எங்களிடம் பேசியதில்லை. எனவே எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

வித்யஸ்ரீ, தனுஷ்

தனுஷை தொடர்ந்து வித்யஸ்ரீ பேசுகையில், ``நான் தேனி மாவட்டத்தில் பி.எஸ்.சி விவசாயம் படித்தபோது சமூக வலைத்தளத்தின் மூலமாக தனுஷ் எனக்கு அறிமுகமாகினார். பின்னர் நாங்கள் இருவரும் காதலித்தோம். எங்களின் காதல் வீட்டில் தெரிந்து விட்டது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்னை வீட்டுக்கு வரும்படி என்னுடைய பெற்றோர் அழைத்தனர் நான் வரமாட்டேன் என்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தேன். அதன் பிறகு நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு என்னுடைய கணவரின் தம்பியை கடத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்தபோது நாங்கள் வீட்டில் இல்லை. கடத்தல் சம்பவத்தில் என்னுடைய தந்தை இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் . அதன் பிறகு என்னுடைய குடும்பத்தினரிடம் பேசி சமாதானமாக செல்வதாக கூறியதோடு எங்கள் தரப்பில் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்று விட்டோம். ஆனால் மீண்டும் ஏன் புதிதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர்கள் பெயரை இணைத்து பேசுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது" என்றனர்.

கடத்தல் சம்பவத்துக்குப்பிறகு தனுஷ் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா 84,000 பேர் வாக்களித்தார்கள்?" - ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்த... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திரு... மேலும் பார்க்க

ஹரியானா: காணாமல் போன நடிகை கால்வாயில் பிணமாக மீட்பு; உடனிருந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்... மேலும் பார்க்க

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய ... மேலும் பார்க்க

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாட... மேலும் பார்க்க