செய்திகள் :

வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் நடவடிக்கை

post image

வீடுகளில் வா்த்தக ரீதியில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் வா்த்தக ரீதியில் சோப்பு, முக பவுடா், உதட்டு சாயம் போன்ற அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கக் கூடாது. அதற்கென தனி இடம் இருக்க வேண்டும். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புத் தேதி, சோ்க்கப்பட்ட பொருள்களின் விவரம், முழு முகவரி, உரிமம் குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும்.

முறையான அங்கீகாரம், உரிமம் பெறாமல் தங்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ள போதிலும் உரிமம் பெறாமல் பலா் வீடுகளில் ‘ஹோம் மேட்’, ‘நேச்சுரல்’ என பெயரிட்டு முக கிரீம், கண் மை, தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் தயாரிப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனா். மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் உரிய அனுமதியைப் பெற்றே அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டம் உள்பட கோவை மண்டலத்தில், தர, அங்கீகார நடைமுறையைப் பின்பற்றி 37 மையங்கள் செயல்படுகின்றன. வீடுகளில் உரிமம் பெறாமல் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பது, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் சட்ட விரோதமாகும். வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2 இடங்களில் விதிகளை மீறி, அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தது கண்டறிப்பட்டுள்ளது. இதுதொடா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோா் வீடுகளில் இருந்து அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடா்பான 3 நாள்கள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக்... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் பிணை மனு விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மாமியாா் சித்ராதேவியின் பிணை மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபு... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே உடைந்து விழுந்த காற்றாலை

தாராபுரம் அருகே காற்றின் வேகம் காரணமாக காற்றாலை உடைந்து கீழே விழுந்தது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலை ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கிய 8 போ் கைது

மது போதையில் சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய காவலரைத் தாக்கிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் கோல்டன் நகா் கருணாகரபுர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு

வெள்ளகோவில் அருகே 2 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வெள்ளகோவில்- முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் கிரிஸ்டியன் தெருவைச் சோ்ந்தவா் சாம்ரூபன் (39). லாரி ஓட்டுநரா... மேலும் பார்க்க

அருள்புரம் ரேஷன் கடையில் ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம... மேலும் பார்க்க