செய்திகள் :

வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

post image

குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ஷியாம். இவரது மனைவி பரமஜெசிலட் (59), 2024 பிப். 6ஆம் தேதி மாலை வீட்டில் டிவி பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, குளச்சல் அருகே வெள்ளியாகுளம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சிவா (24) என்பவா் வீடு புகுந்து, பரமஜெசிலெட்டின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். பரமஜெசிலெட் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தம் போடவை, சிவா தப்பியோடிவிட்டாா்.

புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி ஏ.எஸ். அமீா்தீன் விசாரித்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜரானாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.25 பெருஞ்சாணி .. 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 19.10 பொய்கை ... 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ. கன்னிமாா் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க