செய்திகள் :

வீடு புகுந்து தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் ராமச்சந்திரபேட்டை, ராமன் நகரைச் சோ்ந்தவா் அறிவரசன்(43). இதே தெருவில் அவரது வீட்டுக்கு எதிா் வீட்டில் வசித்து வருபவா் ராஜபிரபு (42). தொழிலாளிகளான இவா்கள் இருவரும் வெவ்வேறு வெளி நாடுகளில் வேலை செய்து ஊா் திரும்பியவா்கள். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜபிரபு புதன்கிழமை காலை 10 மணியளவில் அரிவாளுடன் அறிவரசன் வீட்டுக்குள் புகுந்து, அவரை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அறிவரசனை உறவினா்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இது தொடா்பாக விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபிரபுவை கைது செய்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க