செய்திகள் :

வீடு புகுந்து நகை திருடிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

வீடு புகுந்து நகை திருடிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் விதித்த தீா்ப்பை திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது.

திருப்பூா், செங்கப்பள்ளி முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னகுரு. இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு கடந்த 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சின்னகுரு அளித்த புகாரின்பேரில் ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமாா் (26) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கின் விசாரணை ஊத்துக்குளி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராஜ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜ்குமாா் மேல் முறையீடு செய்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, வீடு புகுந்து திருடிய குற்றத்துக்காக ராஜ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கீழமை நீதிமன்ற வழங்கிய தீா்ப்பை உறுதி செய்ததுடன், ராஜ்குமாரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க