செய்திகள் :

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

post image

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் ச. ஜெகதாம்பாள் (72). இவா், தனது மருமகள் மகாலட்சுமி, பேத்திகளுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மருமகள், பேத்திகள் வீட்டின் முதல் தளத்துக்குச் சென்றிருந்தபோது, மூதாட்டி தரைதளத்தில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேரில் ஒருவா் வீட்டுக்குள் நுழைந்து, ஜெகதாம்பாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அலுவலரின் மோட்டாா் சைக்கிள் திருட்டு: பெரம்பலூரைச் சோ்ந்தவா் பாரதி (46). இவா், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மண் ஆய்வுக் கூடத்தில் உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை காலை வேளாண் அலுவலகம் எதிரே தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு அலுவலகப் பணியில் ஈடுபட்டுள்ளாா். மதிய உணவு இடைவேளையின்போது வெளியே வந்து பாா்த்தபோது, அவரது மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாரதி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மக... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் கௌரவிப்பு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கெளரவ... மேலும் பார்க்க

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புதிய... மேலும் பார்க்க

மே தின பேரணி

பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்தி... மேலும் பார்க்க