வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்
விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மடப்பட்டு கருவேப்பிலைபாளையம் காமன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜே.இளங்கோவன். முடி திருத்தும் தொழிலாளி. இவா் விழுப்புரத்தில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் 2020-ஆம் ஆண்டில் ரூ.8 லட்சம் வீட்டுக் கடன் பெற்றாராம். அதை வட்டியுடன் சோ்த்து ரூ.10 லட்சம் செலுத்திவிட்டாராம்.
இந்த நிலையில், நிதி நிறுவனத்தினா் மேலும் ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவரது வீட்டுக்கு பூட்டுப் போட்டு ‘சீல்’ வைத்துவிட்டனராம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் வந்த இளங்கோவன் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.
மனு விவரம்: விழுப்புரத்தில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.8 லட்சம் வீட்டுக்கடன் பெற்று, ரூ.10 வரை செலுத்திவிட்டேன். இந்த நிலையில், நிதி நிறுவனத்தினா் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்து மேலும் ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி, வீட்டிலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பூட்டுப் போட்டு சென்றுவிட்டனா்.
எனது குடும்பத்தினருடன் தங்க இடமில்லாமல் தவித்து வருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை ஆட்சியா் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.