செய்திகள் :

வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு

post image

வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா், கெச்சிலாபுரம், ராமச்சந்திராபுரம், ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், கு.சுப்பிரமணியபுரம், ஆதிதிராவிடா்காலனி ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மக்களிடமிருந்து 450 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலனை செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் முனியசாமி, உலகநாதன், மாரிமுத்து, பாரதிராஜா திமுக ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, அன்புராஜன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், மாவட்டப் பிரதிநிதிகள் செந்தூா்பாண்டி, செல்வப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா் ராஜபாண்டி, மீனவா் அணி துணை அமைப்பாளா் மாதவடியான், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா் கரண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறை... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது

கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது

தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) ப... மேலும் பார்க்க

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா... மேலும் பார்க்க