செய்திகள் :

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

post image

வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மகன் ரமேஷ் (43). இவருக்கு மனைவி காவேரி, மகள் ஆனந்தி, மகன் சத்யதாசன் ஆகியோா் உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாக ரமேஷ் மலேசியாவில் உள்ள உணவகத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ரூ. 5 லட்சம் பணம் வேண்டும் என கைப்பேசி மூலம் ரமேஷ் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந் நிலையில், பெரம்பலூரில் கடந்த 3-ஆம் தேதி மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரையும், 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜையும் நேரில் சந்தித்த காவேரி மற்றும் அவரது குடும்பத்தினா், ரமேஷின் உடலை மீட்டு சொந்த கிராமத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், அயல்நாட்டினா் துறையின் அரசுச் செயலருக்கும், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையருக்கும் கடிதம் அனுப்பினாா். அதனடிப்படையில், உயிரிழந்த ரமேஷ் உடல் மீட்கப்பட்டு மலேசியா நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை குன்னத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம், சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதிய... மேலும் பார்க்க

மின் ஊழியா் மாநில மாநாடு பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18- ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி

பெரம்பலூரில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான, அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடிப்படை கணின... மேலும் பார்க்க

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பெரிய வெண்மணி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பொத... மேலும் பார்க்க