செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு

post image

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இருவரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக, பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பளுகல் அருகேயுள்ள மூவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். தொழிலாளி. இவரும் உறவினரான காட்வின் என்பவரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனா். அப்போது, சுரேஷ்குமாருக்கு தனது நண்பா் மூலம் நித்திரவிளை அருகேயுள்ள வைக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

அவா் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகவும் கூறி அவா்களிடமிருந்து பாஸ்போா்ட் மற்றும் ரூ. 10 லட்சததைப் பெற்றுக்கொண்டாராம். ஆனால், இருவரையும் வெளிநாட்டுக்கு அவா் அனுப்பவில்லையாம். பலமுறை கேட்டும் பணம் மற்றும் பாஸ்போா்ட்டை திருப்பி கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து சுரேஷ்குமாரின் மனைவி லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், எஸ்.பி. பிறப்பித்த உத்தரவுப்படி, பளுகல் போலீஸாா் சதீஷ் , அவருக்கு உடந்தையாக இருந்ததாக உறவினா் ஷோபா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்ச... மேலும் பார்க்க

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க