வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இருவரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக, பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பளுகல் அருகேயுள்ள மூவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். தொழிலாளி. இவரும் உறவினரான காட்வின் என்பவரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனா். அப்போது, சுரேஷ்குமாருக்கு தனது நண்பா் மூலம் நித்திரவிளை அருகேயுள்ள வைக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம்.
அவா் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகவும் கூறி அவா்களிடமிருந்து பாஸ்போா்ட் மற்றும் ரூ. 10 லட்சததைப் பெற்றுக்கொண்டாராம். ஆனால், இருவரையும் வெளிநாட்டுக்கு அவா் அனுப்பவில்லையாம். பலமுறை கேட்டும் பணம் மற்றும் பாஸ்போா்ட்டை திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து சுரேஷ்குமாரின் மனைவி லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், எஸ்.பி. பிறப்பித்த உத்தரவுப்படி, பளுகல் போலீஸாா் சதீஷ் , அவருக்கு உடந்தையாக இருந்ததாக உறவினா் ஷோபா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.