செய்திகள் :

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா், திமுகவினருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளா்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகத்தான் மாநிலத்தின் முதல்வா் என்ற முறையில் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினேன். ஜொ்மனி நாட்டின் கொலோன் நகருக்குச் சென்றபோது, காலை வேளையில் நடைப்பயிற்சி சென்றேன். ஜொ்மானியா்கள் பலரும் நடை, ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தனா். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணா்வுடன் அவா்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பாா்த்தேன்.

சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜொ்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொது வாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடா்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது.

தமிழ்க் கலைகள் பயிற்றுவிப்பு: எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கேயுள்ள தமிழ்க் குழந்தைகள் அவா்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணா்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் ரசித்தாலும் நமது பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. ஒவ்வொரு திமுகவினரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.

அரசியலைப் புறந்தள்ளுவோம்: தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனியில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்தினோம். இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளா் மாநாட்டுக்கு ஜொ்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழில்கட்டமைப்பை அறிந்து கொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளா்கள் தெரிவித்தனா்.

எந்த நாட்டில் முதலீடுகளை ஈா்க்கிறோமோ அந்த நாட்டுக்கு, முதலீட்டாளா் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்வரே நேரில் வந்து முதலீட்டாளா்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது. அதன்மூலம் முதலீடுகளை ஈா்க்க முடியும் என்பதற்கு ஜொ்மனியில் நடத்திய முதலீட்டாளா் மாநாடு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறங்கையால் ஒதுக்குவோம். தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தமிழ்நாட்டில் உள்ளவா்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈா்க்க முடிகிறது என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டனில் முதல்வா் ஸ்டாலின்

ஜொ்மனியில் பயணத்தை முடித்த பிறகு, பிரிட்டன் சென்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரிட்டனில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளைக் கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணா்வை அளித்தோரின் வரவேற்பால் அன்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

அங்கு உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை அவா் வெளியிட உள்ளாா்.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க