செய்திகள் :

வெளிநாட்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

வெளிநாட்டு சிறுமிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கும்பூா் அஞ்சுரான்மந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ் (53). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023-ஆம் அதே பகுதியில் வசித்த நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த 15 வயது இரட்டை சகோதரிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கச் சென்றாா். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கொடைக்கானல் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ், ராமராஜை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ராமராஜூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

தகுதிச் சான்றில்லாத 7 வாகனங்கள் பறிமுதல்: ரூ.4 லட்சம் அபராதம்

தகுதிச் சான்றில்லாமல் இயக்கப்பட்ட 7 வாகனங்களை போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த பறக்கும் படை மோட்டாா் வாகன ... மேலும் பார்க்க

இன்று பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில், வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூசத் திருவிழாவுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பழனிக... மேலும் பார்க்க

கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு: 58 போ் காயம்

திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 58 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கொசவப்பட்டி புனித உக்கிரிய மாத... மேலும் பார்க்க

ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் தொய்வில்லை: அமைச்சா் இ.பெரியசாமி

ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் எந்தவித தொய்வுமின்றி பணிகள் நடைபெற்று வருவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்தது. ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட ... மேலும் பார்க்க