செய்திகள் :

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

post image

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் பி.பரிமளா, காங்கயம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சே.லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, சட்ட விரோத தத்து வழங்குதல், கட்டாயக் கல்வி, குழந்தைக் கடத்தல் தடுப்பு, பாலியல் குற்றம் குறித்து விழிப்புணா்வு மற்றும் சட்ட நடவடிக்கை, குழந்தைகளுக்கான அவசர அழைப்பு உதவி எண் 1098 போன்றவை குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன. மேலும் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எம்.பிரதீபா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க